ரஜினியின் அடுத்த படம் வசீகரன்
நான் பேரூந்தில் சென்று கொண்டிருந்த போது இரண்டு சிறுவர்கள் எனக்கு முன்னாள் அமந்திருந்தார்கள். உலக அரசியல் தொடங்கி மயூரன் சுகுமாரன் மரண தண்டனை வரை விலாவரியாக கதைத்துக் கொண்டிருந்தார்கள். நானும் பொடியன்கள் விசயமானவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டேன்.இவ்வாறு கதைத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென திரைப்பட உலகிற்குள் நுழைந்தார்கள். அடே!அவதார் 2 வரப்போகுதுடா…என்றான் ஒருவன். பாஸ்ட் அண்ட் பியுரியஸ் அந்த மாதிரி என்றான் இன்னொருவன். எனக்கோ தலை தாறுமாறா சுற்றியது.இவ்வளவு விடயங்களை அந்த சிறுவர்கள் தெரிந்து வைத்திருந்தது மகிழ்ச்சி கலந்த வியப்பை உண்டாக்கியது.
கதை தொடர்கின்றது….
அடே..ரஜினி, படையப்பா மாதிரி ஒரு படம் நடிச்சா எப்படி இருக்கும் என்றான் ஒருவன். டேய்!உனக்கு விசயமே தெரியாதா ரஜினியின் அடுத்த படம் வசீகரன் என்றான் இன்னொருவன்.பேரூந்து தரிப்பிடம் வந்தது.நான் இறங்கிவிட்டேன்.நான் அந்த சிறுவர்கள் கதைத்த கதையை நம்பி விட்டேன்.எனது நண்பர்களுக்கு ரஜினியின் அடுத்த படம் வசீகரன் என்று சொல்லியும் விட்டேன்.அவர்களும் நம்பி விட்டார்கள்.அடுத்த நாள் நண்பர்களிடம் இருந்து அலைபேசி அழைப்புக்கள் வந்தன.எங்கையடா ரஜினி படம் நடிக்கிறார்?படமே நடிக்கலை அதற்குள்ள புதிய படத்திற்கு பெயர் வைத்து விட்டார்களா? என்று ஏகப்பட்ட கேள்விகள்.
எனக்கு இருக்கும் ஒரே கேள்வி இது தான்.அந்த சிறுவர்கள் கதைத்த அனைத்தும் பொய்யா???
………………………………………………………………………………………
………………………………………………………………………………………
………………………………………………………………………………………
நான் பார்த்த சென்னை (காட்சி 9) இந்த மாதம் 25 ம் திகதி வெளியாகும்.
இக்காலப் பிள்ளைகள் வெ வரமானவங்க தான்
LikeLiked by 1 person
நிச்சயமாக சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike