இன்று ராமர் எதிர் ராவணன் போர்
உலகம் இன்று மும்பையில் நடைபெறப்போகும் மிகப் பெரும் போரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றது.
ஆம்,இன்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உலகக் கிண்ண துடுப்பாட்ட இறுதிப் போட்டி நடை பெறுகின்றது.இந்தியாவில் இந்த மிகப்பெரும் சமரை ராமர் ராவணன் போராக நினைக்கிறார்கள்.ராமர் ராமாயணத்தில் ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டார்.அது போல் இன்றைய போட்டியிலும் இந்தியா இலங்கையை வெற்றி கொள்ள ராமர் துணையிருப்பார் என்று நம்புகிறார்கள்.அதே போல் சச்சினை அனுமானாக சித்தரிக்கிறார்கள். அனுமான் இலங்கையை எரித்தது போல, சச்சின் இலங்கையை துவம்சம் செய்வார் என்று நினைக்கிறார்கள்.
அது சரி,இலங்கை இது பற்றி என்ன நினைக்கிறது.ராவணனைக் கொன்ற ராமரை பலி தீர்க்குமா இலங்கை?! இன்று இரவுக்குள் தெரிந்து விடும் பதில்.
இராவணன் ஒரு இலங்கைத் தமிழன். தமிழனாக உலகத் தமிழர்கள் பெருமை கொள்வோம்.
பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு
ராமர், ராவணன்
கோபப்பட வேண்டாம்!….. இரு நாட்டுச் செயல்களால் எனக்கு இதில் ஆர்வமே இல்லை….வாழ்க! வெற்றி பெறுக!…..!!!!!??????
LikeLike
எனக்கும் ஆர்வம் இல்லை சகோதரி.இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் நான் மகிழ்ச்சி அடையப் போவதில்லை.
இந்தியாவில் இதை எப்படி சித்தரிக்கிறார்கள் என்று தான் எழுதியிருந்தேன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike