இல்லம் > ALL POSTS, சினிமா > நடிகை மீனா – வித்யாசாகர் கல்யாணம் முடிந்தது

நடிகை மீனா – வித்யாசாகர் கல்யாணம் முடிந்தது


meena-marriage picநடிகை மீனாவுக்கும், சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் இன்று திருப்பதியில் கோலாகலமாக கல்யாணம் நடந்து முடிந்தது.
நடிகை மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் திருமணம் நிச்சயமானது.

இவர்களது திருமணம் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடந்தது.

meena-marriageஇரு வீட்டார், உறவினர்கள், கலந்து கொண்டனர். திரையுலகம் சார்பில் நடிகை சங்கவி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமணத்தின்போது புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி சில பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க முயன்றபோது மீனாவின் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்கள் புகுந்து அவர்களை தடுத்தனர். அதில் ஒரு புகைப்படக்காரர் தாக்கப்பட்டார்.

இதையடுத்து புகைப்படக்காரர்கள் திருப்பதி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து 3 புகைப்படக்காரர்களை போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்ட மீனாவுக்கு, சென்னை மற்றும் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
  1. chollukireen
    8:12 பிப இல் 2009/07/12

    சலசலப்பில்லாத கலியாணம். சணடையில்லாமல் கலியாணம் இதெல்லாம் எப்படி விமரிசையில் சேரும்? ரிஸப்ஷனுக்கு போய் அனுமதியுடன் படம் எடுத்து விட்டால் போகிரது. என்று போலீஸ் சமாதானம் சொல்லி அனுப்புமா. சின்ன விஷயம் எப்படிப் போகிரது?

    Like

  2. 11:03 முப இல் 2009/07/14

    ”சலசலப்பில்லாத கலியாணம். சணடையில்லாமல் கலியாணம் இதெல்லாம் எப்படி விமரிசையில் சேரும்? ரிஸப்ஷனுக்கு போய் அனுமதியுடன் படம் எடுத்து விட்டால் போகிரது. என்று போலீஸ் சமாதானம் சொல்லி அனுப்புமா. சின்ன விஷயம் எப்படிப் போகிரது?”

    நீங்கள் சொன்னது போல் போலீஸார் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    உங்கள் வருகைக்கும்
    கருத்துக்கும்
    நன்றி சொல்லுகிறேன்.

    Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக